கடைசியில் தன்னுடைய மகனை உப்பளத்தில் கொத்தடிமையாக இருக்கும் கொடுமையிலிருந்து மீட்கத் தன்னுடைய கிட்னியை விற்க மாமனாருடன் சென்னைக்கு வரும் சரண்யாவின் பணத்தைத் திருடி இறுதி நேரத்தில் ‘மனம் திருந்தி’ ஒப்படைத்துவிட்டு கண்கலங்குகிறார் சிம்பு.
சில வித்தியாசமான காட்சிகள். கிட்னியை நகரத்தில் விற்க வரும் சரண்யாவும் முதுமையேறிய அவருடைய மாமனாரும் கிட்னித் தரகர்கள் ஒட்ட வைக்கும் பொய்யைச் சரிவரச் சொல்ல முடியாமல் திணறுகிற காட்சி.. தன்னுடைய தோழியைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் டாக்டரிடம் திரும்பத் திரும்பக் கெஞ்சும் பாலியல் தொழிலாளியான அனுஷ்கா. ''உங்களுடன் படுத்துக்கிறேன்.. எப்படியாவது இவளைக் காப்பாத்துங்க'' என்று மன்றாடுகிற இன்னொரு காட்சி.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்கள் அந்நியத் தன்மையுடன் நடத்தப்படும் விதத்தைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் மக்கள் அடர்ந்திருக்கிற பொது மருத்துவமனையில் துப்பாக்கிகளுடன் சகலரையும் தாக்குபவர்களாக இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் காட்டியிருப்பதும் பொருத்தமாக இல்லை. அதிலும் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற மருத்துவமனையிலேயே தீவிரவாதியான ஜெயப்பிரகாஷ் உடம்பில் வெடிமருந்தைக் கட்டிக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுகிறாராம்.
தமிழ் சினிமாவும், தீவிரவாதக் குளறுபடிகளும் - என்று கோடம்பாக்கத்துக் கதைக் களத்தைப் பற்றித் தனியாகத் ''தீவிரமான'' ஆராய்ச்சியே பண்ண வேண்டும் போலிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக