வெள்ளி, 6 மே, 2011

மே 25ல் +2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு



இந்த வருடம் 7.7 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதியுள்ளனர். மே 9ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. இதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகின்றது. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின் 10 நாட்களில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும். பின்னர் ஒரே நாளில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். மே 25ஆம் தேதி அன்று மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக