வெள்ளி, 6 மே, 2011

டோர்ஜீ காண்டு உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது

கடந்த சனிக்கிழமை அன்று அருணாசலப் பிரதேச முதல்வராக இருந்த டோர்ஜி காண்டூ தவாங்கிலிருந்து இடாநகருக்குச் செல்லும் வழியில் லோக்தாங் பகுதியில் ஜாங் அருவிப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவருடைய உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அஞ்சலிக்காக இடாநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் காண்டூவின் சொந்த நகரமான தவாங்கில் அரசு முழு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பிற தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக